728 X 90 Ad slot

Monday, May 9, 2011

guru peyarchi palangal 2011 - thualam

துலாம்
(சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3வது பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

துலாம் ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 7வதாக வரும் ஆண் ராசியான துலாத்தின் உருவம் துலாக் கோலை ஒத்திருக்கும். துலாமை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள். அரிய, பெரிய காரியங்களைப் பிறர் வியக்கும் வண்ணம் சாதிக்கும் திறமையுடையவர் தந்திரமாக சாதிக்கக்கூடிய காரியங்களில் விடாக் கண்டர்கள். தரகு, மத்தியஸ்தம் செய்யும் துறைகளில் இவர்களைக் கருவியாகப் பயன்படுத்தினால் காரிய வெற்றியும் கைமேற் பலனும் கிட்டிடும். துலாமிற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சுக்ரன். அதிர்ஷ்ட மலர்-வெண்தாமரை. அதிர்ஷ்டக் கல்-வைரம். அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை. அதிர்ஷ்ட திசை-தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண்-6. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-லட்சுமி.

துலாம் ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: சித்திரை 3, 4 பாதங்கள். சுவாதி 1, 2, 3, 4 பாதங்கள். விசாகம் 1, 2, 3 பாதங்கள். சித்திரை 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மூளைதான் மூலதனம். இதைக்கொண்டு வியாபாரத்திலோ, தொழிலிலோ லாபம் பெறுவார்கள். புதிய இடங்களுக்குச் செல்வதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஈடுபாடுள்ளவர்கள். சித்திரை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் பொறுப்பை ஏற்பதில் முதலில் சிறிது தயங்கினாலும், எதையும் ஏற்றுக்கொண்ட பிறகு முழு முயற்சியுடன் சாதித்து முடித்திடுவார்கள். கஷ்டப்பட்டு முன்னுக்கு வரக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய அதிபதி ராகு ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய ஆரம்ப தெசை ராகு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சித் திறனுடையவர். எக்காரியத்திலும் நல்லது கெட்டது என இரண்டையும் அலசிப் பார்த்து பிறகு செயலில் ஈடுபடுவர். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- ரோகிணி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், அதிர்ஷ்ட மலர்-வெண்தாமரை. அனுகூல தெய்வம்-பத்திரகாளி. அதிர்ஷ்டக் கல்-கோமேதகம். அதிர்ஷ்ட நிறம்-கருமை கலந்த மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்-6, 15. சுவாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக சரீர உழைப்பின்றி மூளையின் உதவியைக் கொண்டு புத்திக்கூர்மையாலும் வாக்கு சாதுர்யத்தாலும் சாதிக்கக்கூடிய செயல்களில் இவர் திறமை சோபிக்கும். சட்ட நுணுக்கங்களை ஆராய்வதிலும் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதிலும் தனித் திறமை வாய்ந்தவர்கள். சுவாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுறு சுறுப்பாக செயல்படும் இயல்புடையவர்கள். கம்பீரமான தோற்றமும் அழகான கண்களும் உடையவர்கள். எதிலும் ஆழ்ந்த கருத்தும் கற்பனையும் உடைய இவர்களுக்கு இரக்க குணம் உண்டு. சுவாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் முன்னேற்றப் பாதையில் முன்னணியில் இருப்பார்கள். எளிதில் இவரை ஏமாற்ற முடியாது. வளர்ச்சிக்குரிய காரியங்களையும் பத்திரப்படுத்தக்கூடிய சேமிப்பு விவகாரங்களையும் இவரிடத்தில் ஒப்படைப்பது சிறந்ததாகும். சுவாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குத் தாம் வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கமுடையவர்கள். பிறரிடத்தில் உள்ள உயரிய குணங்களைப் போற்றிப் புகழ்வதோடு தாமும் அவற்றைப் பின்பற்றுவதற்குத் தயாராய் இருப்பார்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி குரு ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை குரு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து செயல்படுபவர்களாக இருப்பதோடு நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ்வார்கள். கல்வியில் தேர்ச்சியும், நல்ல நிர்வாகத் திறமையும் பெற்றிருப்பார்கள். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-உத்திராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் புனர்பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி, அதிர்ஷ்ட மலர்-முல்லை. அனுகூல தெய்வம்-பிரம்மா. அதிர்ஷ்டக் கல்-கனக புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்-வெண் மஞ்சள். அதிர்ஷ்ட எண்-7, 15. விசாகம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் தான் பயன்படுத்தும் பொருட்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். சந்தர்ப்பத்திற்கேற்ப சமாளிக்கும் திறமையும் தெளிவும் இவருக்குக் கை கொடுக்கும். விசாகம் 2ம் பாதத்தல் பிறந்தவர்கள் மற்றவர்களின் எண்ணவோட்டத்தை žக்கிரமாகக் கிரகித்துக்கொள்வார்கள். பெரும் புகழைத்தேட வேண்டும் என்பது, இவரது வாழ்நாள் இலட்சியமாக இருக்கும். விசாகம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் தம்முடைய காரியங்களைத் தம்முடைய இருப்பிடத்தில் இருந்துக் கொண்டே சாதித்துக் கொள்வார்கள். பிறர்க்கு தம்மால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உதவி பெறக்கூடிய வழியைக்காட்டுவார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 5-ல் இருந்து பல நல்ல பலன்களையும், உயர்வையும் தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 6ம் வீட்டுக்கு மாறுவதால், எதிலும் நிதானமாய் செயல்படுவது அவசியம். பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வருதல் நல்லது. தொழில் துறையில் இருப்பவர்கள் தேடி வரும் வளர்ச்சி வாய்ப்புகளை கவனத்துடன் செயல்படுத்தினால் வளமான வாழ்வு அமையும். பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பிறரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் போது, அதற்குரிய விதிமுறைகளைக் கடைபிடித்து வந்ததால், வீண் சிக்கலும், மன உளைச்சலும் எழாமல் பார்த்துக் கொள்ள முடியும். குழந்தைகளிடம் அன்பாக நடந்துக் கொண்டால் அவர்கள் எப்போதும் உங்கள் பக்கம்தான்! அசையாச் சொத்துக்களில் அதிக முதலீடுகளைத் தவிர்ப்பதுடன், நம்பிக்கைக்கு உகந்தவர்களை பங்காளிகளாகச் சேர்த்துக்கொண்டு செயலாற்றினால், வியாபாரம் ஓரளவு லாபகரமாய் அமையும். வலிய உறவு கொண்டாடவரும் பகைவரிடமிருந்து விலகி இருந்தால், சங்கடங்களிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

பெண்களுக்கு: நீங்கள் நல்லது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்க உறவுகள் தயாராய் இருக்கும் பிள்ளைகளிடம் கோபதாபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்த்தால் உங்கள் பணிகள் அனைத்தும் žராகவே நடக்கும். தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும். பொருளாதாரத் தேவைகளை சமாளிக்க கடன்பட நேரலாம். நல்லவர்கள் போல் நடிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். பயணங்களில் கைப்பொருளை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாய் இருத்தல் அவசியம்.

மாணவர்களுக்கு: குறுக்கு வழியில் சிந்தனையை அலைய விடாதிருந்தால், நாடி வரும் நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்ள இயலும். விடாமுயற்சியினால் சில நெருக்கடிகளை சமாளித்து, எதிர்நீச்சல் போட்டால், வெற்றியெனும் வழி தெரியும். உதவி செய்ய வருபவர்களை உதாžனப் படுத்தாமலிருந்தால் நிறைய நன்மைகளை அடையலாம். தீயவரை ஒதுக்கி நல்லவரின் நட்புறவைப் பலப்படுத்தினால், வளமான வாழ்க்கை அமையும். உடல் நலத்தை நன்றாக பராமரித்தால், உங்களின் உற்சாகம் குறையாமலிருக்கும்.

வியாபாரிகளுக்கு: ஆடம்பரமான செலவுகளைத் தவிர்த்தால், சேமிப்பினை உடைக்கும் நிலை உண்டாகாமல் இருக்கும். அதிக ஆசைப்படுதல், அகலக் கால் வைத்தல் ஆகியவற்றை விலக்கினால், வந்து கொண்டிருந்த லாபம் குறையாமலிருக்கும். நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளின் மேல் சந்தேகப் பார்வை வேண்டாம். பண இருப்புக்கேற்றவாறு சரக்குகளை வாங்கிக் கொள்ளுதல் நலம். உடனிருந்து தொல்லை தருபவர்களிடம், எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: சில நேரங்களில் தேவையற்ற அலைச்சலும், இடமாற்றமும் உங்களின் அமைதியைக் கெடுக்கும். மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. உயர் பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கடமையாற்றினால், அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்பலாம். எப்போதும் கவனமாய் இருந்தால், எதிரிகளின் வலையை சுலபமாக அறுப்பதோடு நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொள்வது ஓரளவு எளிதாக இருக்கும்.

கலைஞர்களுக்கு: ஏற்ற இறக்கமான பொருளாதாரத்தை சமப்படுத்த கடும் முயற்சி தேவைப்படும். உண்ணவும், உட்காரவும் நேரமின்றி ஓடிக்கொண்டே இருப்பீர்கள். எந்த வேலையிலும் உங்கள் முழு கவனம் இருப்பது அவசியம். புதிய மற்றும் நூதன முயற்சிகளுக்கு ஆதரவான கால நேரம் வரும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது. விழா, விருந்து ஆகியவற்றில் எதிலும் அளவாக இருந்தால், எந்தத் தொந்தரவும் எழாது. நெருக்கடியான நேரங்களில் புத்திசாலித்தனமாக நடந்துக் கொண்டால், உங்கள் உழைப்பும் நேரமும் வீணாகாமலிருக்கும்.

விவசாயிகளுக்கு: பயிர்களுக்குத் தேவையான பூச்சி மருந்து, உரம் முதலியவற்றை வாங்குவதில் கவனமாக இருப்பதன் மூலம் பணக் கஷ்டத்திலிருந்து தப்பிக்க இயலும். அதிக வட்டிக்குப் பணம் வாங்குவதைத் தவிர்த்து கூட்டுறவு வங்கிகளை அணுகினால், கடனை அடைப்பதில் உள்ள சிரமங்கள் குறையும். குறைவான முதலீட்டில் ஓரளவு லாபம் தரும் பயிர் மற்றும் பூ வகைகளைத் தேர்வு செய்வதன் மூலம் அதிக பணம் முடங்குவதைத் தவிர்க்க முடியும். போர் பைப் போடுபவர்கள் கூட்டு முயற்சியாக செயல்பட்டால், நீர் பற்றாக்குறை என்ற நிலையை மாற்றுவது ஓரளவு சாத்தியமாகும். மேலும் தேவையானபோது சொட்டுப்பாசன முறையைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: சூடான வார்த்தைகளை உதிர்க்காமலிருந்தால் சுற்றியிருப்பவரின் அன்பையும் ஆதரவையும் எளிதில் பெற முடியும். பல நேரங்களில் உழைப்பு அதிகாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும் எதிரிகளால் அமைதிக் குறைவு, உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்பட இடம் கொடாமல் விழிப்பாய் இருப்பது அவசியம். அசையாச் சொத்துக்களின் பராமரிப்பில், கவனமாக இருப்பது அவசியமாகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் இயல்பு வாழ்க்கையோடு மோதாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

பரிகாரங்கள்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கேற்றி வந்தால், நலம் பல கூடும். ஏழைகளுக்கும், வயதானவர்களுக்கும் இயன்றபோது அன்னதானம் செய்து வர, குடும்பத்தில் உள்ள குறைகள் நீங்கி நலமும், வளமும் பெருகும். அவரவர்க்குரிய குல தெய்வத்தை வழிபட்டு வர, துன்பங்கள் விலகி இன்பங்கள் கூடும்.

Monday, May 9, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “guru peyarchi palangal 2011 - thualam”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...