728 X 90 Ad slot

Monday, May 9, 2011

guru peyarchi palangal 2011

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

விருச்சிக ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 8-வதாக வரும் பெண் ராசியான விருச்சிகத்தின் உருவம் தேளை ஒத்திருக்கும். விருச்சிகத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் அடிமை வாழ்க்கையை ஒரு நாளும் விரும்ப மாட்டார்கள். எந்தத் தொழில் செய்தாலும் சுயமாகச் செய்வதுதான் நன்மை தரும் என்று தீவிரமாக நம்புவார்கள். விருச்சிகத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-செவ்வாய். அதிர்ஷ்ட மலர்-செண்பகம். அதிர்ஷ்டக் கல்-பவளம். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு. அதிர்ஷ்ட திசை-தெற்கு. அதிர்ஷ்ட எண்-9. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-சுப்பிரமணியர்.

விருச்சிக ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: விசாகம் 4ம் பாதம், அனுஷம் 1, 2, 3, 4 பாதங்கள். கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள். விசாகம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் பொறுப்புகளை ஏற்பதற்குத் தயங்குவார்கள். பண விவகாரங்களில் எளிதில் பிறரை நம்ப மாட்டார்கள். அப்படியே இவரிடத்திலிருந்து அனுகூலங்களைப் பெறுவது மிகக் கடினம். தம்முடைய காரியங்களைத் தம்முடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டே சாதித்துக் கொள்வார்கள். பிறர்க்கு தம்மால் உதவி பெறக்கூடிய வழியைக் காட்டுவார்கள். அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தெசையே ஆரம்ப தெசையாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் காரியத்திற்கும் பிறர் உதவியை நாடாதவர்கள். சுய நம்பிக்கையுடையவர்கள் என்றும், தன் கையே தனக்குதவியென்ற திட சித்தம் உடையவர்கள். அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு: வேதை(ஆகாதது)- பரணி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை, அனுகூல தெய்வம்-எமன். அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு, அதிர்ஷ்ட எண்-8. அனுஷம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஓயாது உழைப்பார்கள். தன் சக்திக்கு மீறி காரியங்களையும், அலுப்பு சலிப்பின்றிச் செய்திடுவார்கள். ஸ்திர புத்தியுடையவர்கள், அரிய பெரிய தத்துவங்களை எளிதில் கிரகித்துக் கொள்ளும் மெய்ஞான உணர்வுடையவர்கள். அனுஷம் 2-ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்கள். நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற்குள் செய்வனவற்றைத் திருந்தச் செய்வார்கள். சிறிய முயற்சியில் பல காரியங்களைச் சாதித்திடுவார்கள். அனுஷம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்தற்பத்திற்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு. காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்திவாய்ந்தவர்கள். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம் வசமாக்கிக் கொள்வார்கள். அனுஷம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எளிதில் வராது கோபம். வந்தால் கண் மூடித்தனமாக எதையும் செய்திடுவார்கள். இரக்க குணமுடையவர்கள். பழைய சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதிலும் இவர் நூதன முறையைக் கையாள்வார்கள், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய கருத்துக்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கமளிப்பார்கள். உறவினர்களிடத்தில் வாஞ்சையுடையவர்கள் இருப்பது சிறிதெனினும் சுயமாகத் தேடி அதைப் பன்மடங்காக்கும் வல்லமை உடையவர்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு: வேதை(ஆகாதது)- அசுவினி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. அதிர்ஷ்ட மலர்-வெண்காந்தள், அனுகூல தெய்வம்-காளி மாதா. அதிர்ஷ்டக் கல்-மரகதம். அதிர்ஷ்ட நிறம்-பச்சை. அதிர்ஷ்ட எண்-9. கேட்டை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக் கைவிட மாட்டார்கள். சில விஷயங்களில் சுயநலவாதிகள் என்றாலும் தம்மை நம்பி வந்தவர்களுக்கு நல்ல பாதுகாப்பளித்திடுவார்கள். கேட்டை 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சட்டென்று தன் உணர்வுகளை வெளிக்காட்டத் தயங்குவார்கள். மேலும் நண்பர்களிடமிருந்து அதிக உதவியையும், அதிக ஆறுதலையும் எதிர்பார்க்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். கேட்டை 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரத்திலும் தலையிடமாட்டார்கள். பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைபிடித்தோ காரியத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. கேட்டை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதையும் திறம்படச் செய்ய வேண்டுமென்ற கொள்கை உடையவர்கள். சில சமயங்களில் மனக்குழப்பமும் மனோவியாகூலமும் இவரைப் பெரிதும் பாதிக்கும்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21.11.2010. அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 4ல் இருந்து நன்மைகளை வர விடாமல் தடுத்து கொண்டிருந்த குரு, இந்த பெயர்ச்சி மூலம் 5ம் வீட்டுக்கு மாறுவதால், பல நன்மைகள் தானே வந்து சேரும். இது வரை நீங்கள் அனுபவித்த பொருள் கஷ்டம், மனக் கஷ்டம் யாவும் நீங்கிவிடும். எந்த விஷயத்திலும் தயங்காமல் காலை வைக்கலாம். ஏனெனில் உங்களுக்கு நன்மை தரப்போகும் நண்பர்களும், நல்லவர்களும் உங்களை சூழ்ந்துள்ளார்கள். பிரிந்திருந்த உறவுகளும், குடும்பமும் இணைவதால், மகிழ்ச்சியும் பெருகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கான வாய்ப்பு கூடி வருவதால், பெண்கள் தனி உற்சாகத்துடன் வலம் வருவார்கள். வெளி வட்டார பழக்கங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தில் நிலவிய வில்லங்கங்கள் நீங்கி சுமூகமான முடிவுகள் ஏற்படும். தொழில் விரிவாக்கத்தால் லாபம் கூடும். எந்த ஒரு விஷயமும், எந்த முடிவும் உங்களுடைய தீவிர முயற்சியால் நிறைவான பலனைத் தரும். பலன் தரும் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டு. அவர்களின் மேல் படிப்பு, வேலை ஆகியவை அதிக சிரமமின்றி அவர்களின் விருப்பப்படி நிறைவேறும். உங்களின் அயராத உழைப்பால் உன்னதமான நிலையை அடைவீர்கள்.

பெண்களுக்கு: நெடுநாளாக மகப்பேறை எதிர்பார்த்திருந்த பெண்கள் தாயாகும் பாக்கியம் பெறுவதால், மனக்குறை நீங்கும். இல்லத்தில் இருக்கும் மகிழ்ச்சி, உள்ளத்திலும் நிறைந்திருக்கும். அடிக்கடி குழம்பிக் கொண்டிருந்த விவகாரங்களில் நல்லதொரு தீர்வு கிடைக்கும். பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும். மருத்துவ செலவிற்காக கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியிருந்தாலும், ஆரோக்கியம் žராக இருக்கும். தொழில் மாற்றம், பணி நிமித்தம் நீண்ட நாட்களாக பிரிந்திருந்தவர்கள், குடும்பத்துடன் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைக்கும்.

மாணவர்களுக்கு: பாராமுகமாய் இருந்த நண்பர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள். குரு நல்ல இடங்களைப் பார்ப்பதால், உங்களுடைய இனிமையான பேச்சால் அனைவரையும் வžகரித்து விடுவீர்கள். உங்களை தேடி வரும் வாய்ப்புகளை நழுவ விடாமல் சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டால், உங்கள் திறமை உங்களின் வளமைக்கு அடித்தளமாக மாறும். உங்களின் பாசத்தை நண்பர்கள் புரிந்து கொள்வதால் உறவுகள் வலுப்படும். கல்லூரிப் போட்டிகளில் உங்கள் பெயர், திறமை இரண்டையும் நிலைப்படுத்திக் கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு: புதிய யுக்திகளைப் பயன்படுத்தி தேடி வரும் வாய்ப்புக்களையும், அதனுடன் வரும் லாபத்தையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். தேவைப்படும் உடனிருப்பவர்கள் உங்கள் ஏற்றத்திற்கு உறுதுணையாக அமைவார்கள். வியாபார வட்டத்தில் உங்களின் நாணயம் நம்பிக்கை இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும். தொழில் நிலையை மேம்படுத்த எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பிரயாணத்தால் நன்மை உண்டு. மனதை நெருடிக் கொண்டிருந்த விஷயங்களுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: தேவையற்ற பரபரப்பும், பொறுமையின்மையுமாக இருந்த நிலை மாறி அமைதியாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். அலுவலக அளவில் முக்கியப் பொறுப்பு வகிப்பதால் மக்களிடமும், சக ஊழியர்களிடமும் எளிதில் பழகும் சுமூக வாய்ப்பு கிடைக்கும். தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செல்வாக்கும் மதிப்பும் பெறுபவர்களாகத் திகழ்வார்கள். சக பணியாளர்களுடன் ஒற்றுமையும், நட்பும் உண்டாகும். ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், அதிக சலுகைகளும் தடையின்றிக் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு: முன்னேற்றத்திற்கான திட்டங்களில் இருந்த தேக்க நிலை மாறுவதால், மீண்டும் புதிய பொலிவுடன், உங்கள் திறமைகளை அரங்கேற்றும் வாய்ப்பு கிட்டும். குடியிருக்கும் வீட்டை உங்கள் விருப்பம் போல் மாற்றி மகிழ இது ஏற்ற காலம். கலைஞர்களின் திறமைக்கு ஏற்ற மதிப்போ, பாராட்டோ கிடைக்காமல் இருந்த நிலை மாறி தகுதிக்கு உரிய பாராட்டு கிடைக்கப் பெறும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். €விட்டு போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. தொழிலில் நிலவிய குழப்பங்களும், நெருக்கடிகளும் மறையும்.

விவசாயிகளுக்கு: குறுகிய கால பயிர்கள் மூலம் பெறும் லாபம் அதிகரிப்பதால், கடன் தொல்லைகள் பெருமளவு குறைந்து உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். இது வரை எதிர்கொண்ட தொழில் நெருக்கடிகள் விலகி, புதிய உத்திகளைப் பயன்படுத்தி மகசூலை பெருக்கும் வாய்ப்பும் மனம் போல் வந்து சேரும். தரமான விதைகள், பூச்சிக்கொல்லிகள் முதலியவை வாங்க அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களுடைய பராமரிப்பால் பயிர்களில் உள்ள பூச்சித் தொல்லை மட்டுப்படும்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: குரு நல்ல இடத்தில் இருப்பதால், உங்களின் வாக்கு வன்மை பெருகும். விழா, விருந்து என்று உங்கள் பரபரப்புக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிராது. தொடர் பயணங்களால் லாபமும், வெற்றியும் உண்டு. நல்ல சுற்றமும், நட்பும் உடனிருந்து தரும் ஊக்கத்தால், நல்ல வாழ்க்கை அமையும். எதிர்ப்பும், போட்டியும் விலகுவதால், ஏகோபித்த ஆதரவு கிட்டுவதுடன், நல்ல பதவியும் கிட்டும். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு தகுந்த நேரத்தில் பக்க பலமாக இருப்பார்கள்.

பரிகாரங்கள்: பிரதோஷம் வரும் நாளன்று சிவனை வழிபட்டு அவருக்குப் பிடித்த வில்வத்தால் அர்ச்சனை செய்து வரவும். திங்கள்கிழமை தோறும், அபிராமி அன்னையை வலம் வருவோர்க்கு நலம் பல கூடும்.

Monday, May 9, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “guru peyarchi palangal 2011”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...