728 X 90 Ad slot

Wednesday, July 13, 2011

Swami Nithyananda and Ranjitha accused Sun TV and Nakeeran video 100 croes crores



Sun Tv Demanded Rs.100 C roes crores to Nithyananda

Swami Nithyananda and Ranjitha accused Sun TV and Nakeeran

Chennai, Jul 13: Has Nithyananda's time finally come? Well, only time will tell that, but Swami Nithyananda whose image has been tarnished by his exposure in alleged 'sexual' scenes with actress Ranjitha by Sun TV, has now filed a case against the channel and Nakeeran Tamil magazine, almost more than a year after the incident.

The Nithyananda episode had made headlines not only nationally, but also at the international level.

For the first time, after the incident, Swami Nithyananda and Ranjitha came together at a press conference at Chennai on Wedensday July 13.

Nithyananda accused Sun TV and Nakeeran of extortion and land grabbing. Clad in white dhoti and wearing a turban and a white shawl, Swami Nithyananda said that the video images were morphed by Sun TV, and that the bedroom shown in the clip is not his.

But he was flooded by a number of questions by the mediamen - why did he take one year to come up with the charges, being the main one.

He calmly replied that he was scared for his and his devotees' lives.

It is widely assumed that since Maran is out of power, and DMK is on the receiving end, and also because the state government is changed, it is a different situation now, and reportedly Nithyananda is trying to go on a 'damage control' mode by coming into the limelight again.

On July 7, Nithyananda's aide, Dhyanapeetam's Nityasarvananda sought action against both of them, for letting their Sun TV staff to "trespass" into their ashram at various places and allegedly assaulting the inmates. He addressed a press conference in Bangalore on Jul 7.

Today, Nithyananda also said, "A man who called himself Sridhar claiming to be a representative of Sun TV and Nakeeran, was acting as the mediator. He also accused Sun Pictures COO Hansraj Saxena, who is now in prison in connection with a cheating case. Saxena threatened us on the phone and his assistant Ayyapan did it directly."

It may be recalled that in March 2010 Nithyananda's 'sex' video had been widely telecast, and subsiquently he was arrested in Himachal Pradesh.

----------------


""நித்யானந்தாவுடன் இருப்பது நான் இல்லை. அது, "மார்பிங்' முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. என்னை பற்றி அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சன், "டிவி' மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,'' என, நடிகை ரஞ்சிதா கூறினார்.

சென்னையில் நேற்றிரவு, நிருபர்களுக்கு ரஞ்சிதா அளித்த பேட்டி: சில பத்திரிகைகள், மீடியாக்கள் மனசாட்சி இல்லாமல் என்னைப்பற்றி எழுதி, தெருவில் நிற்க வைத்துவிட்டன. இஷ்டத்திற்கு கற்பனையாக எழுதி, என் தனிப்பட்ட வாழ்க்கை சுதந்திரத்தை பறித்துவிட்டன. அருவருக்கத்தக்க, ஆபாச காட்சிகளை, சன் நெட்வொர்க், "டிவி'க்கள், தினகரன் நாளிதழ், தினகரன் வெப்சைட்டிலும், வெளியிட்டனர். இப்படி, என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, என்னை மக்கள் மத்தியில் அசிங்கப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக புகார் கொடுக்க சென்னையில் கால் வைத்தால், உடனே, கைது செய்து உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினர். இதனால், ஒன்றரை ஆண்டுகளாக பாதுகாப்பு கருதி சென்னை வரவில்லை; போலீசிலும் புகார் செய்யவில்லை. அப்போது நான் புகார் கொடுத்திருந்தால், எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள். அப்போது இருந்த ஆட்சி நிலை வேறு, தற்போது உள்ள ஆட்சி நிலை வேறு. தனி மனித உரிமைகள் பற்றி அப்போது எனக்குத் தெரியாது. தற்போது முழுவதுமாக தெரிந்து கொண்டதால் தைரியம் வந்துள்ளது. தற்போது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையால், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் செய்துள்ளேன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும், போலீஸ் கமிஷனர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
லண்டனில், 168 ஆண்டு பாரம்பரியமிக்க, "நியூஸ் ஆப் த வேர்ல்டு' பத்திரிகை, தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, சில தினங்களுக்கு முன் மூடப்பட்டுள்ளது. சித்தரித்த ஆபாச காட்சிகளை வெளியிட்டு, என் கண்ணியத்தைக் காயப்படுத்திய, "டிவி' பத்திரிகைகள் மீது ஒன்றரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்ட ரீதியாக நடவடிக்கை கோரியே போலீசில் புகார் செய்துள்ளேன்.

நித்யானந்தருடன் இருப்பது நான் அல்ல. அது, "மார்பிங்'முறையில் சித்தரிக்கப்பட்வை. எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. உண்மையை மாற்றி மாற்றி பேச முடியாது.
காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் பற்றிய முழு விவரத்தை போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன். இப்போது வெளிப்படையாக சொல்ல நான் விரும்பவில்லை. என் மீது அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சன், "டிவி', செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. முதல்வரை நேரில் சந்திப்பீர்களா என கேட்கிறீர்கள். நான் உங்கள் மீடியாக்கள் மூலமே முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.

-----------------------


என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. பிரஸ்பாஸ் செய்து எடுக்கப்பட்டு வீடியோ மார்க் செய்யப்பட்டுள்ளது. காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சிகள் தான் லேப்புக்கு அனுப்பட்டதா? என கேள்வி எழுகிறது.

ஆபாச வீடியோ ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

நான் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.

சில பத்திரிகைகள், டி.வி.கள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வி. யும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.

அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சினை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்து உள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்து இருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மததாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று நடிகை ரஞ்சிதா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஆட்சி மாற்றத்திற்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்ததாகவும், தற்போது உண்மையை கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Wednesday, July 13, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Swami Nithyananda and Ranjitha accused Sun TV and Nakeeran video 100 croes crores”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...